Saturday, September 28, 2024
Home » ஐஏஎஸ்., ஐபிஎஸ், ஐஎப்எஸ் பதவிக்கான மெயின் தேர்வு இன்று மீண்டும் தொடக்கம்

ஐஏஎஸ்., ஐபிஎஸ், ஐஎப்எஸ் பதவிக்கான மெயின் தேர்வு இன்று மீண்டும் தொடக்கம்

by Karthik Yash

சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பதவிக்கான மெயின் தேர்வு இன்று மீண்டும் நடக்கிறது. காலையில் இந்திய மொழிகளில் ஒரு தாள் தேர்வும், பிற்பகலில் ஆங்கிலம் தேர்வும் நடக்கிறது.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட 1056 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலை தேர்வை கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி நடத்தியது. இத்தேர்வில் இந்தியா முழுவதும் 14,627 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தை பொறுத்தவரை சுமார் 650 பேர் வரை தேர்ச்சி பெற்றனர்.

இந்நிலையில் சிவில் சர்வீஸ் பணிக்கான மெயின் தேர்வு கடந்த 20ம் தேதி தொடங்கியது. மெயின் தேர்வு இந்தியா முழுவதும் 24 நகரங்களில் நடந்தது. தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னையில் மட்டும் தேர்வு நடந்தது. 20ம் தேதி அன்று கட்டுரை வடிவிலான தேர்வு நடந்தது. தொடர்ந்து 21ம் தேதி காலையில் இரண்டாம் தாள் (பொது அறிவு 1), மதியம் மூன்றாம் தாள் (பொது அறிவு 2) தேர்வு நடந்தது. 22ம் தேதி காலையில் 4ம் தாள் (பொது அறிவு 3), பிற்பகலில் 5ம் தாள் தேர்வு (பொது அறிவு4) தேர்வும் நடந்தது. சென்னையில் எழும்பூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரம்பூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பி.சி.கே.ஜி. அரசு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை சுமார் 650 பேர் எழுதினர்.

இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) மீண்டும் சிவில் சர்வீஸ் தேர்வு நடக்கிறது. இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை இந்திய ெமாழிகளில் ஒரு தாள் தேர்வும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை ஆங்கிலம் தேர்வும் நடக்கிறது. கடைசி நாளான நாளை காலையில் விருப்ப பாடம் முதல் தாள் தேர்வும், பிற்பகலில் விருப்ப பாடம் இரண்டாம் தாள் தேர்வும் நடக்கிறது. தேர்வு மையங்களுக்கு செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள், தகவல் தொடர்பு உபரகரணங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வுக்கூடங்களுக்கு தேர்வு எழுதுபவர்களை தவிர வேறு யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வு நடைபெறும் மையங்கள் அனைத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

eighteen + twenty =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi