ஐஏஎஸ் பயிற்சி மைய மாணவி மர்ம சாவு

தூத்துக்குடி: ஐஏஎஸ் பயிற்சி மைய மாணவி, பெண்கள் விடுதியில் மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அசோக் நகரை சேர்ந்த அண்ணாதுரை மகள் ஸ்ரீதேவி (23). தூத்துக்குடியில் செயல்படும் பிரபல ஐஏஎஸ் அகாடமியில் வங்கி வேலைக்காக படித்து வந்த இவர், தூத்துக்குடி மேலூர் பங்களா தெருவில் உள்ள தனியார் மகளிர் விடுதியில் தங்கியிருந்தார்.

நேற்று மதியம் வழக்கம்போல் மதிய உணவு சாப்பிட்ட இவர், அங்குள்ள கட்டிலில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். சக மாணவிகள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மத்திய பாகம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், பிரேத பரிசோதனைக்கு பிறகே மாணவி இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது