சென்னை: அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் ஐ.பெரியசாமியை வழக்கில் இருந்து விடுவித்த சிறப்பு நீதிமன்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும் மார்ச் 28க்குள் நேரில் ஆஜராகி ஒரு லட்சம் ரூபாய்க்கு பிணை செலுத்தவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.