சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் வேலை வாய்ப்புகளை மாணவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். நான் முதல்வன் திட்டம் மூலம் திறன் பயிற்சி பெற்ற கல்லூரி மாணவர்கள் 70 பேருக்கு உதயநிதி பணி நியமன ஆணை வழங்கினார். இளைஞர்கள், இளம்பெண்களுக்கு பயிற்சி அளித்து வேலை பெற்று தருவதில் திறன் மேம்பாட்டு கழகம் சிறப்பாக செயல்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.