இதையடுத்து பேரூராட்சி பணியாளர்கள் பழுதான ஹைமாஸ் விளக்குகளை நேற்று பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கோபுரத்தில் விளக்குகளை தாங்கி நிற்கும் கம்பி எதிர்பாராத விதமாக அறுந்து விழுந்தது. இதைப் பார்த்து கம்பத்தின் கீழே பணிபுரிந்த தொழிலாளர்கள் சிதறி ஓடினர். இதில், கஜேந்திரன் என்னும் தொழிலாளிக்கு மட்டும் சிறிய காயம் ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. எனவே, அடிக்கடி ஹைமாஸ் விளக்கை பராமரிக்க வேண்டும் என அப்பகுதி வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்வை விடுத்தனர்.