ஐதராபாத்தில் நூதன முறையில் கடத்தப்பட்ட 454.4 கிராம் தங்கம் பறிமுதல்..!!

ஐதராபாத்: ஐதராபாத்தில் நூதன முறையில் கடத்தப்பட்ட 454.4 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து விமானம் மூலம் வந்த பயணியை பிடித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதையடுத்து அவர் கொண்டு வந்த பொருட்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர் கொண்டுவந்த சூட்கேசை சோதனை செய்தனர்.

அப்போது அந்த சூட்கேசில் பயன்படுத்தப்படும் சிறிய வகை ஆணி மற்றும் கம்பி போன்று தங்கத்தை மாற்றி கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரிகளுக்கு சந்தேகம் வரமால் இருப்பதற்காக அதன் நிறத்தையும் மாற்றி எடுத்து வந்தது தெரியவந்தது. இந்நிலையில், அதிகாரிகள் நடத்திய சோதனையில் 454.4 கிராம் எடை கொண்ட 64 சிறிய ஆணிகள் மற்றும் 16 தங்க கம்பிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், இதன் மதிப்பு ரூ.21 லட்சத்து 20 ஆயிரம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

குளச்சலில் மீனவர்கள் வலையில் சிக்கிய நெத்திலி மீன்கள்: விலை வீழ்ச்சியால் கவலை

இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு மெரினாவில் நாளை விமான சாகசம்: போக்குவரத்தில் மாற்றம்: 6500 போலீசார் பாதுகாப்பு

எங்களை என்றும் இளமையாக இயக்குவது திமுக: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு