ஐதராபாத்தில் இருந்து சென்னை சென்ற குசு பஸ்சில் ரூ.55 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது

திருமலை: ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு சென்ற தனியார் சொகுசு பஸ்சில் ரூ.55.87 லட்சம் ஹவாலா பணத்தை கூடூரு போலீசார் பறிமுதல் செய்தனர். ந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் கூடூரு போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டுனர். அப்போது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் சொகுசு பஸ்சில் நடத்திய சோதனையில் ரூ.55.87 லட்சம் கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது.

பணம் வைத்திருந்தவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லை. இதனால் ஹவாலா பணமாக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.பணத்தை கொண்டு வந்த பிடுகுராளாவை சேர்ந்த இருவரை கூடூரு ஊரக போலீசார் கைது செய்தனர். அவர்களின் பெயர் விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.

Related posts

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது