Tuesday, September 17, 2024
Home » ஐதராபாத் தனியார் மருத்துவமனையில் ‘ரமணா’ படம் பாணியில் சடலத்துக்கு சிகிச்சை அளித்து டாக்டர்கள் நாடகம்

ஐதராபாத் தனியார் மருத்துவமனையில் ‘ரமணா’ படம் பாணியில் சடலத்துக்கு சிகிச்சை அளித்து டாக்டர்கள் நாடகம்

by Lakshmipathi

*உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு

திருமலை : ஐதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் இறந்த நோயாளிக்கு ‘ரமணா’ படம் பாணியில் சிகிச்சை அளிப்பது போல் டாக்டர்கள் நாடகமாடினர். இதையறிந்து உறவினர்கள் போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழில் விஜயகாந்த் நடித்த ‘ரமணா’ திரைப்படத்தில் தனியார் மருத்துவமனையில் டாக்டர்கள் சடலத்துக்கு சிகிச்சை அளிப்பது போல் நடித்து பணம் கேட்பார்கள். இதேபோல் தெலங்கானா மாநிலம் ஐதராபாத் கச்சிபவுலியில் உள்ள கார்ப்பரேட் தனியார் மருத்துவமனையின் டாக்டர்கள் இறந்த உடலுக்கு சிகிச்சை அளித்து குடும்பத்தினரிடம் பணம் வசூலிக்க முயன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.

தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் நர்சாபூரை சேர்ந்த வெங்கடேஷ்(50) புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். சில நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக ஐதராபாத் கச்சிபவுலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர். கடந்த 2ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்காக ₹5.50 லட்சம் பெற்றனர். இன்னும் இரண்டு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படும் என டாக்டர்கள் கூறினர்.

இந்நிலையில் வெங்கடேஷை உறவினர்களை பார்க்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. உள்ளே சென்று யாராவது பார்த்தால் நோயாளிக்கு தொற்று பரவும் எனவே வெங்கடேசனை பார்க்க முடியாது என உறவினர்களிடம் டாக்டர்கள் கூறினர். ஆனால் வெங்கடேஷுக்கு மேலும் சிகிச்சை தேவை என்றும் ₹4.50 லட்சம் செலுத்த வேண்டும் என்றும் கூறினர்.

இதனால் பயத்தில் வெங்கடேஷ் உறவினர்கள் நேற்று முன்தினம் ஐசியூ கண்ணாடியை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது வெங்கடேஷ் ஏற்கனவே
இறந்து இருப்பதை பார்த்து இறந்தவருக்கு என்ன சிகிச்சை அளிக்கிறீர்கள் என கூறி ஆத்திரமடைந்த குடும்பத்தினர் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணத்துக்காக சடலத்திற்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக போராட்டம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மருத்துவமனை நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

You may also like

Leave a Comment

two × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi