குழந்தை இல்லாத விரக்தியில் கடந்த 20ம் தேதி, வீட்டில் மனைவி இல்லாதபோது முரளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், கணவர் இறந்த துக்கத்தில், நர்மதாவும் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்துள்ளார். கணவரை இழந்த சோகத்தில் நேற்று முன்தினம் இரவு நர்மதாவும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், நர்மதாவின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.