கணவன். மனைவி கொடூரக்கொலை

துறையூர்: திருச்சி மாவட்டம், துறையூர் அருகே பி.மேட்டூரை சேர்ந்தவர் ராஜ்குமார் (29). இவரது மனைவி சாரதா (20). இவர்கள் உப்பிலியபுரம் அருகே சோபனபுரத்தில் விஜயசேகரன் என்பவரின் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்திருந்தனர். கடந்த 2 ஆண்டாக அந்த நிலத்தில் உள்ள வீட்டில் தங்கி விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் விஜயசேகரன் சோபனபுரம் சென்ற போது அங்கு வீட்டு வாசலில் இரும்பு கட்டிலில் விஜயசேகரன், சாரதா ஆகியோர் தலை, கழுத்து பகுதியில் வெட்டு காயங்களுடன் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர். பொருட்களோ, நகைகளோ திருட்டு போகாத நிலையில் அவர்கள் எதற்காக, யாரால் கொலை செய்யப்பட்டனர் என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

2வது ஒருநாள் போட்டியில் இன்று இந்தியா – இலங்கை பலப்பரீட்சை: முதல் வெற்றிக்கு முனைப்பு

சென்னையில் இன்று டிஎன்பிஎல் பைனல்: கோவை – திண்டுக்கல் மோதல்

ஹாக்கி காலிறுதியில் இன்று கிரேட் பிரிட்டன் சவாலை முறியடிக்குமா இந்தியா