பரேலி: சுடுகாட்டில் தகாத உறவு காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவியை தீ வைத்துக் கொன்ற கணவனை உத்தரபிரதேச போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் ஷாஹி அடுத்த கோடியா கிராமத்தை சேர்ந்தவர் நேபால் சிங் என்பவருக்கும் அவரது 35 வயதுடைய மனைவிக்கும், மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நேபால் சிங்கின் மனைவிக்கும், அதேபகுதியை சேர்ந்த மற்றொரு வாலிபருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது. இந்த கள்ளக்காதல் விவகாரம் நேபால் சிங்குக்கு தெரியவந்தது. சம்பவ நாளில் மூன்று குழந்தைகள், கணவருக்கு உணவளித்துவிட்டு அந்தப் பெண் உறங்கச் சென்றார். அடுத்த சில மணி நேரங்கள் கழித்து தனது கள்ளக்காதலனை தேடி, அவரது இருப்பிடம் சென்றார். இருவரும் அந்த கிராமத்தில் இருக்கும் சுடுகாட்டை நோக்கி ெசன்றனர்.
பின்னர் அவர்கள் சுடுகாட்டில் உல்லாசமாக இருந்தனர். ஒருபக்கம் பிணங்கள் எரிந்து கொண்டிருந்த நிலையில், மற்றொரு பக்கம் இவர்கள் உல்லாசமாக இருந்தனர். இதற்கிடையே வீட்டில் இருந்த கணவன், திடீரென கண்விழித்து பார்த்த போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மனைவி மாயமானதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் மனைவியை ேதடி சுடுகாட்டின் வழியாக சென்றார். அப்போது கள்ளக்காதல் ஜோடி உல்லாசமாக இருப்பதை பார்த்து ேநபால் சிங் அதிர்ச்சியடைந்தார். பின்னர் அங்கு பிணத்தில் எரிந்து கொண்டிருந்த தீக் கட்டை ஒன்றை எடுத்து, உல்லாசமாக இருந்த கள்ளக்காதல் ஜோடிகள் மீது போட்டார். தீக் கட்டை தங்களது மீது விழுவதை பார்த்த கள்ளக்காதலன், அரைகுறை ஆடையுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.
ஆனால் நேபால் சிங்கின் மனைவியின் மீது தீப் பற்றியதால், அவரது உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டன. அவர் தீக்காயங்களால் துடித்த நிலையில், தனது மனைவியை காப்பாற்றாமல் தனது வீட்டிற்கு நேபால் சிங் திரும்பினார். மறுநாள் காலை சுடுகாட்டின் வழியாக சென்ற மக்கள், அந்தப் பெண் தீக்காயத்தால் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை பார்த்தனர். உடனடியாக அவர்கள் அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்தப் பெண் இறந்தார். இச்சம்பவம் தொடர்பாக நேபால் சிங்கை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கள்ளக்காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.