இதைப்பார்த்து அச்சமடைந்த செல்வம் அதே அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். குழந்தை நீண்ட நேரமாக வீட்டிற்கு வெளியே அழுதபடி இருந்தால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக வீட்டின் உள்ளே எட்டிப் பார்த்தனர். அப்போது, செல்வம் தூக்கில் தொங்கிய நிலையிலும், தீபா கீழே படுத்த நிலையிலும் இருந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் தீபாவை மீட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி தீபா நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார்.