கணவர் ஓட்டிய டிராக்டரில் சிக்கி மனைவி பரிதாப பலி

சூளகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா கொள்ளப்பள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் கஜேந்திரன் (40). விவசாயியான இவருக்கு புஷ்பா (33) என்ற மனைவியும் ஜோசிகா என்ற மகளும் உள்ளனர். நேற்று மதியம் 3 மணி அளவில், அங்குள்ள தோட்டத்தில் மாற்று பயிரிட கஜேந்திரன், டிராக்டரில் நிலத்தை சமன் செய்து கொண்டிருந்தார். அப்போது அவருடன் மனைவி புஷ்பா, உடனிருந்து புற்களை அகற்றிக்கொண்டிருந்தார்.

அப்போது வயலில் கிடந்த சொட்டு நீர் குழாய்கள் டிராக்டரில் சிக்கி இருந்ததை புஷ்பா கண்டார். இதையடுத்து டிராக்டரில் சிக்கிய குழாய் துண்டை எடுக்க முயன்ற போது, திடீரென கை சிக்கி உள்ளே இழுத்தது. இதில் தப்பிக்க முயன்றும் முடியாத நிலையில், டிராக்டரில் சிக்கிய புஷ்பா சம்பவ இடத்திலேயே பலியானார். இதை கண்ட கணவர் கஜேந்திரன் மனைவியை மீட்காமல் டிராக்டரை விட்டு விட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். தகவலறிந்து வந்த போலீசாரிடம், ‘மனைவி டிராக்டரில் சிக்கிய பின்பு கஜேந்திரன் வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டி உள்ளார்.

இதனால் புஷ்பாவின் மரணத்தில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. இதனால் உரிய விசாரணை நடத்த வேண்டும்’ என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related posts

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல்; பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக தேர்தல் ஆணையம்

தொழிலாளர் கட்சி தேர்தல் அறிக்கையில் திமுக அரசின் திட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு பாஜக பொருளாளர் ஆஜராக ஆணை