கணவர் 2வது திருமணம் செய்து மிரட்டல் மகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி

*திருப்புவனத்தில் பரபரப்பு

திருப்புவனம் : திருப்புவனத்தில் கணவர் இரண்டாவது திருமணம் செய்ததாக கூறி மிரட்டல் விடுத்ததால், மகளுடன் இளம்பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே தூதை விலக்கு பகுதியைச் சேர்ந்தவர் ஹரிசரவணன்(35). திருப்புவனம், மானாமதுரை, பார்த்திபனூர் உள்ளிட்ட பகுதிகளில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ஆனந்தலட்சுமி(28) என்பவருக்கும் கடந்த 2015ல் திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர்.

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆனந்தலட்சுமி, தனது தந்தை வீட்டிற்கு மகளுடன் சென்று விட்டார். மேலும், கணவர் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார். நீதிமன்றத்திலும் வழக்கு நடந்து வருகிறது.இந்நிலையில் கணவர் ஹரி சரவணன் வேறொரு பெண்ணை 2வதாக திருமணம் செய்துள்ளதாகவும், தினமும் போனில் மிரட்டல் விடுப்பதாக கூறி, நேற்று திருப்புவனத்தில் கணவர் ஹரி சரவணன் நகைக்கடை முன் நடுரோட்டில் மகளுடன் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனந்தலட்சுமி கூறுகையில், ‘‘கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்து கொண்டு என்னை துன்புறுத்தியதால் தந்தை வீட்டிற்கு சென்றேன். இந்நிலையில் அந்த பெண்ணையே கோயிலில் வைத்து 2வதாக திருமணம் செய்து கொண்டதாகவும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் எனக்கு மிரட்டல் விடுத்து வருகிறார்’’ என்றார்.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு