மேலும் ஹெலன் புயலால் தென்கிழக்கு பகுதி மற்றும் புளோரிடா மாகாணம் முழுவதும் பெரிய அளவில் அழிவை சந்தித்தன. மணிக்கு 225 கி.மீ. வேகத்தில் வீசிய காற்றால் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள், மரங்கள், மின்கம்பங்கள் இடிந்து விழுந்தன. இதனால் லட்சக்கணக்கான மக்கள் மின்சாரமின்றி இருளில் சிக்கி தவித்தனர். இந்நிலையில் ஹெலன் புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64ஆக அதிகரித்துள்ளது.