பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே அய்யனேரி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆல் தி சில்ரன் அறக்கட்டளை சார்பில் சர்வதேச மனித உரிமைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜான் வில்சன் தேவாரம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் உதவி தலைமை ஆசிரியர் முரளி முன்னிலை வகித்தார். பள்ளி மாணவர்கள் பங்கேற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வழக்கறிஞர் சிவபிரகாசம் மனித உரிமைகள் குறித்து விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முடிவில் அறக்கட்டளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரஜினி நன்றி கூறினார்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மனித உரிமைகள் தின விழிப்புணர்வு
previous post