வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், அறநிலையத் துறை அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவித்தது தொடர்பாக, சிவகாஞ்சி, கரூர், ஊட்டி, திருவாரூர் ஆகிய காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், முதல் தகவல் அறிக்கை கட்டத்திலேயே இருப்பதால் அந்த 4 வழக்குகள் ரத்து செய்யப்படுகிறது. அதேசமயம், இதே விவகாரத்தில் விருதுநகர், இருக்கன்குடி, ஈரோடு ஆகிய காவல் நிலையங்களில் பதிவான வழக்குகளில் நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கலாகிவிட்டது. எனவே,இந்த 3 வழக்குகளை ரத்து செய்ய முடியாது. ஈரோடு நீதிமன்றத்தில் உள்ள வழக்கை வில்லிப்புத்தூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறது.
பெரியார் சிலை உடைப்பு தொடர்பாக ஈரோடு காவல் நிலையத்தில் பதிவாகி, அங்குள்ள நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 3 வழக்குகளை ரத்து செய்யக்கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. அவை சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறது. கனிமொழியை விமர்சித்தது தொடர்பாக ஈரோட்டில் பதிவுசெய்யப்பட்ட ஒரு வழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறது. அந்தந்த விசாரணை நீதிமன்றங்கள் 3 மாதத்தில் வழக்கைமுடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.