விதிமீறும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், தனிநபர் தனது சுய லாபத்திற்காக சில்லரையாக வாங்கி சேர்த்து டாஸ்மாக் கடை மூடியிருக்கும் நேரத்தில் விற்றால் அதற்கு டாஸ்மாக் ஊழியர் எந்த விதத்திலும் பொறுப்பேற்க முடியாது. ஒரு நபருக்கு எத்தனை பாட்டில்கள் கொடுக்க வேண்டும் என்று விற்பனை விதிகள் எதுவும் இதுவரை எழுத்துப் பூர்வமாக இல்லை.
எனவே, கடைகளில் முறைகேடு இருந்தாலோ, அல்லது கடை பணி நேரத்தில் மொத்தமாக சரக்கு கொடுக்கும்போது பிடிபட்டாலோ தாங்கள் எடுக்கும் நடவடிக்கைக்கு ஆட்சேபணை இல்லை. இதுபோன்ற நிகழ்வுகள் தொடராமல் இருக்க, தனிநபர் ஒருவருக்கு எத்தனை மது பாட்டில்கள் விற்பனை செய்ய வேண்டும். அதற்கான விதிமுறையை நிர்வாகம் உருவாக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.