வீடு புகுந்து 5 சவரன் திருடிய பெண் கைது

அண்ணாநகர்: சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் பத்மநாதன் (55). இவரது வீட்டில் வைத்திருந்த 5 சவரன் நகை, கடந்த 6ம் தேதி திருடுபோனது. இதுகுறித்து சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அதில், ஒரு பெண் பத்மநாதன் வீட்டிற்குள் செல்வது பதிவாகி இருந்தது. விசாரணையில் அவர், விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த அன்னலட்சுமி (49) என்பதும், விருகம்பாக்கம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும், இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரிந்தது. அவரை கைது செய்தனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்