வீட்டுமனை பட்டா கோரி மனு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாவட்ட நலக்குழு உறுப்பினர் நீலவானத்து நிலவன் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அதன் விவரம் வருமாறு, திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பிஞ்சிவாக்கம் ஊராட்சியில் 27 ஆதிதிராவிடர் குடும்பத்தினர் நத்தம் பகுதியில் 25 ஆண்டுகளாக குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு குடிநீர், மின்சாரம், தெரு வசதி உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு இதுவரை வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை. எனவே உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

 

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு