இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஐஎம்எல் மாவட்ட செயலாளர் ரணியப்பன், கூடுவாஞ்சேரி நகர செயலாளர் தினேஷ்குமார், மாவட்ட தலைவர் ராஜேஸ்குமார் ஆகியோர் கண்டன உறையாற்றினர். வட்டாட்சியரை நேரில் சந்தித்து பட்டா வேண்டி பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் கொடுக்கப்பட்டன. இதில், இறுதியாக செங்கற்பட்டு ஆதிதிராவிட நல வட்டாட்சியரை சந்தித்து வண்டலூர் சர்வே எண் 114 ஆதி திராவிட மக்கள் குடியிருப்பில் நடந்த நில மோசடி குறித்து உடன் விசாரணை நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.