இதையடுத்து சந்திரன், ‘எனது வீட்டிற்குள்ளேயே புகுந்து திருடுகிறாயா?’ என சத்தமிட்டவாறு அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தார். வீட்டு வாசலை மறித்து நின்ற மக்கள் கதவை திறக்குமாறு திருடனை எச்சரித்தனர். ஆனால் திருடனிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதையடுத்து பொதுமக்கள் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். அப்போது உள்ளேயிருந்த திருடன் வீட்டின் மாடி வழியாக தப்பி சென்றது தெரியவந்தது. சந்திரன் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 3 சவரன் செயின் திருடு போயிருந்தது.