வீடுகளில் மது பதுக்கி விற்ற 4 பேர் கைது

 

பாப்பிரெட்டிப்பட்டி, மே 1: பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, பொம்மிடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், பொம்மிடி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது வடசந்தையூர் பகுதியை சேர்ந்த சந்திரா(80) என்பவர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். பையர்நத்தம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் வீட்டில் 28 பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. அதே போல், முத்தம்பட்டியை சேர்ந்த சண்முகம்(75), பெருமாள்(60), சுகுணா(35) ஆகியோரது வீடுகளில் 97 பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, அவர்களை கைது செய்தனர்.

Related posts

அரியலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் நத்தம் புறம்போக்கு நிலத்தை ஒதுக்கீடு செய்து சமுதாய கூடம், நூலகம், கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும்

புதுக்கோட்டையில் உலக மருத்துவ தினம் கொண்டாட்டம்