ஓசூர்: ஒசூர் அருகே கொத்தகொண்டப்பள்ளி கிராமத்தில் ரூ.15 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளது. 2 ஏக்கர் 20 சென்ட் அரசு நிலத்தை வீரபத்தரப்பா என்பவர் 15 ஆண்டுகளாக அறக்கட்டளை என்ற பெயரில் பயன்படுத்தி வந்துள்ளார். வீரபத்தரப்பா பயன்படுத்தி வந்த ரூ.15 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை வருவாய் துறை அதிகாரிகள் மீட்டனர்.