ஏற்கனவே ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டிருக்கும் நிலையில், அவற்றை 20க்கும் மேற்பட்ட வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மேலும், யானைகளை மீண்டும் கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்டி விடத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பகல் நேரத்தில் வனப்பகுதிக்கு அருகேயுள்ள விவசாயத் தோட்டங்களில் பணிபுரியும்போது பாதுகாப்பாக இருக்கும்படியும், மாலை மற்றும் இரவு நேரத்தில் வனப்பகுதிக்கு அருகே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வனத்துறை அதிகாரிகள் கிராம மக்களை அறிவுறுத்தியுள்ளனர். மேலும், நேற்று மலை முதல் 20க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் யானை கூட்டங்களை விரட்டுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.