கிருஷ்ணகிரி: ஓசூர் சாணமாவு வனப்பகுதியில் 2வது நாளாக 30 யானைகள் தஞ்சமடைந்துள்ளன. ஊடேதுர்கம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள் சாணமாவு வனப்பகுதியில் தஞ்சமடைந்தது. இரவு நேரங்களில் வனப்பகுதிக்குள் செல்லவோ, கால்நடை மேய்ச்சலுக்கு செல்லவோ வேண்டாம் என வனத்துறை எச்சரித்துள்ளது.