அப்போது விஷ்ணு மட்டும்அறையில் இருந்தார். மற்ற மாணவர்கள் சாப்பிட்டுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது விஷ்ணு மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி உயிருக்கு போராடியதால் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், விஷ்ணு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாலக்காடு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.