இந்நிலையில், ஹமாஸ் பிடித்து வைத்திருந்த பிணைக்கைதிகள், தனது நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரியாமல் தவறுதலாக 3 பேரை சுட்டுக்கொன்றுவிட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. சம்பவம் குறித்து இஸ்ரேலிய ராணுவம் வருத்தம் தெரிவித்தது. நடந்தவற்றுக்குப் பொறுப்பேற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 பிணை கைதிகள் உயிரிழந்தது தாங்க முடியாத சோகம் என்று இஸ்ரேல் பிரதமர் மெஞ்சமின் நெதன்யாகு வேதனை அளிக்கிறது என தெரிவித்துள்ளார். காசாவில் கிளர்ச்சியாளர்களுடன் நடந்த மோதலின்போது அந்தச் சம்பவம் நடந்ததாக ராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளனர். சுடப்பட்ட 3பேரும் கிளர்ச்சியாளர்களின் பிடியிலிருந்து தப்பியிருக்கலாம் அல்லது கைவிடப்பட்டிருக்கலாம். எனவே சம்பவம் தொடர்பாக வெளிப்படையாக விசாரிக்கப்படும் என்று இஸ்ரேலிய ராணுவம் உறுதியளித்துள்ளது.