திருவள்ளூர்: தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கம் சார்பில் திருவள்ளூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில தணிக்கையாளர் மணி தலைமை தாங்கினார். உறுப்பினர்கள் ராஜேஷ், சரவணன், ஏசுபாதம், ராமன், பாலாஜி, விஜயராஜ் முனிராஜ், சாலமன், சீனிவாசன் ஜெனிபர், உமா, நதியா, சங்கீதா, மாரியம்மா, பாஞ்சாலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம், மாவட்ட அமைப்பு செயலாளர் கோபிநாத், வட்டக்கிளை தலைவர் தண்டபாணி, ஷாபின்பாட்ஷா கலந்து கொண்டு பேசினர்.
இதில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சங்கத்தின் சார்பாக முதல் கட்டமாக மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தினை அரசு செவி சாய்க்கவில்லை என்றால் தொடர்ந்து 2ம் கட்டமாக ஆகஸ்ட் 21ம் தேதி சென்னை, டிஎம்எஸ் வளாகத்தில் கால வரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என சங்கத்தின் சார்பாக தெரிவித்தனர்.