மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ்

சென்னை: ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நெஞ்சு வலி மற்றும் மூச்சு திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டு இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கடந்த 21ம் தேதி செந்தில் பாலாஜி மீண்டும் நெஞ்சு வலி மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டதால் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இதயவியல் மருத்துவர்கள் பரிசோதனை செய்து தொடர்ந்து கண்காணித்தனர். அவரது உடல் நல்ல முன்னேற்றம் அடைந்ததை தொடர்ந்து மூன்று வேளையும் மருந்து மாத்திரைகளை முறையாக எடுத்துக் கொள்ள அறிவுறுத்தி மருத்துவர்கள் நேற்று டிஸ்சார்ஜ் செய்தனர். இதனையடுத்து அவர் புழல் மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

Related posts

தமிழகத்தில் வரும் 10-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மணிப்பூர்; முன்னாள் முதலமைச்சர் வீட்டில் ராக்கெட் லாஞ்சர் மூலம் தாக்குதல்!

சிலைகள் நிறுவுதல், கரைக்கும்போது நடைபெறும் ஊர்வலத்தின்போது 64,217 போலீசார் பாதுகாப்பு பணி!