மேலும், வருமான வரிச்சட்டம் 139ஏன் படி, மேற்கண்ட குறிப்பிட்ட பரிவர்த்தனைகளில் நிரந்தர கணக்கு எண் (பான்) பெறப்பட வேண்டும். ஆனால் இந்த விதிகளை மீறுவது பரலவாக நடக்கிறது. எனவே இது போன்ற அதிக ரொக்கப் பண பரிவர்த்தனை செலவினங்களை வரி செலுத்துவோரின் தகவலுடன் சரிபார்த்து வருமான வரித்துறை ஆய்வு செய்ய வேண்டும். இதில் விதிமீறல் குறித்த ஆதாரங்களை கண்டறிவது கட்டாயமாகும். மேலும், கடந்த 2023 ஏப்ரல் 1ல் ரூ.24,51,099 கோடியாக இருந்த வருமான வரி நிலுவைத் தொகை 2024 ஏப்ரல் 1ல் ரூ.43,00,232 கோடியாக அதிகரித்துள்ளது. எனவே, வரி நிலுவைத் தொகையை வசூலிக்க, அதிகப்படியான நிலுவை கொண்ட முதல் 5,000 வழக்குகளுக்கு முன்னுரிமை அளித்து நிலுவை வரிகள் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.