முன்னதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டியில், ‘தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு 2,253 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு அவற்றை நிரப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்’ என்றார்.