மருத்துவமனையை பராமரிக்காத டாக்டர் மாற்றம் அமைச்சர் அதிரடி

பரமக்குடி: பரமக்குடி மாவட்ட தலைமை மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அங்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒட்டப்பட்ட நோட்டீஸ்கள் அகற்றாமல், பராமரிப்பு இல்லாமல் இருந்த சுவர்கள், சுகாதாரமற்ற வளாகம் உள்ளிட்டவைகளை பார்த்ததும் உடனடியாக தலைமை மருத்துவரை பணியிட மாற்றம் செய்ய உத்தரவிட்டார்.

முன்னதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டியில், ‘தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு 2,253 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு அவற்றை நிரப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்’ என்றார்.

Related posts

‘அதிமுகவை விட்டு யாரும் போகல’: சொல்கிறார் எடப்பாடி

மாவட்டந்தோறும் முதியோர் இல்லம்: அரசு அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழ் வழி சான்று உண்மையா? லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரிக்க உத்தரவு