சட்டீஸ்கரில் கடந்த 2018ல் தேர்தலில் தோல்வி அடைந்த 5 முன்னாள் அமைச்சர்களுக்கு பாஜ இம்முறை அதே தொகுதிகளில் சீட் கொடுத்தது. இதில், பைகுந்த்பூர் தொகுதியில் பய்யலால் ராஜ்வாடே, பிலாஸ்பூரில் அமர் அகர்வால், ராய்ப்பூர் நகர மேற்கில் ராஜேஷ் முனாட் ஆகியோர் வெற்றி பெற்றனர். முன்னாள் அமைச்சர்கள் பிரேம்பிரகாஷ் பாண்டே (பிலாய் நகர்) மற்றும் மகேஷ் கக்டா (பிஜப்பூர்) ஆகியோர் மீண்டும் தோல்வி அடைந்தனர்.