நாங்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டோம். ஆனால் எனது வீட்டில் திருமணத்திற்கு எனக்கு வரன் பார்த்தனர். நானும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தேன். இதையறிந்த எனது தோழி கடந்த மே 10ம் தேதி ஆத்திரமடைந்து எனது வீட்டுக்கு வந்து என்னிடம் வாக்குவாதம் செய்தார். வாக்குவாதம் முற்றியதில் நீ என்னை விட்டு ஏன் ஆணுடன் திருமணம் செய்கிறாய்? என்று கூறியபடி வீட்டின் மாடியில் இருந்து என்னை கீழே தள்ளிவிட்டார். இதனால் எனது கால் எலும்பு உடைந்துள்ளது. தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறேன். இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே என்னை கீழே தள்ளி கொலை செய்ய முயன்ற தோழி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறினார்.