ஓரினச்சேர்க்கை ஆசிரியைக்கு கல்யாண ஆசை மாடியில் இருந்து தள்ளி காலை உடைத்த தோழி

வேலூர்: வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர்வு கூட்டத்தில் பேர்ணாம்பட்டை சேர்ந்த 25 வயது இளம்பெண் கால் உடைந்த நிலையில் கட்டுபோட்டபடி வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நானும் எனது தோழியும் 9ம் வகுப்பு முதல் ஒன்றாக படித்து பள்ளி படிப்பை முடித்தோம். பின்னர் இருவரும் வேறு கல்லூரியில் படித்தோம். தொடர்ந்து நாங்கள் தொடர்பில் இருந்தோம். நான் எம்ஏ எம்எட் படித்துள்ளேன். எனது தோழி எம்ஏ எம்பில் படித்துள்ளார். நான் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறேன். நாங்கள் தோழியாக இருந்ததால் இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக வாழலாம் என்று முடிவெடுத்திருந்தோம்.

நாங்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டோம். ஆனால் எனது வீட்டில் திருமணத்திற்கு எனக்கு வரன் பார்த்தனர். நானும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தேன். இதையறிந்த எனது தோழி கடந்த மே 10ம் தேதி ஆத்திரமடைந்து எனது வீட்டுக்கு வந்து என்னிடம் வாக்குவாதம் செய்தார். வாக்குவாதம் முற்றியதில் நீ என்னை விட்டு ஏன் ஆணுடன் திருமணம் செய்கிறாய்? என்று கூறியபடி வீட்டின் மாடியில் இருந்து என்னை கீழே தள்ளிவிட்டார். இதனால் எனது கால் எலும்பு உடைந்துள்ளது. தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறேன். இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே என்னை கீழே தள்ளி கொலை செய்ய முயன்ற தோழி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறினார்.

Related posts

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

ஜூலை-04: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை