அப்போது, ஒரு காட்டு யானை, ஒரு வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து சாப்பிட ஏதாவது கிடைக்குமா? என துதிக்கையால் தேடி காய்கறிகளை எடுத்து சாப்பிட்டது. இந்த யானையை பார்த்ததும் வீட்டிலிருந்த தோட்ட பணியாளர்கள் அச்சத்தில் உறைந்தனர். அப்போது தோட்ட பணியாளர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுக்க மற்றொருவர், “வீட்டில் ஒண்ணும் இல்ல சாமீ…. அவ்வளவுதான்…. போ சாமீ…’’ என யானையிடம் பேச்சுவார்த்தை நடத்தி, திருப்பி அனுப்ப முயன்றார். ஆனாலும், அந்த யானை செல்லவில்லை. சிறிது நேரம் அங்கேயே நின்று தேடுதல் வேட்டை நடத்திவிட்டு, சுமார் 10 நிமிடம் கழித்துதான் சென்றது. இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.