ஆவடி: ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை, பாலவேடு பிரதான சாலையில் வசிப்பவர் ராமமூர்த்தி (71), ஓய்வுபெற்ற விமானப்படை ஊழியர். இவர், உடல்நிலை சரியில்லாததால் கடந்த 10ம் தேதி மனைவியுடன், போரூரில் உள்ள மகள் வீட்டில் சென்று தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று காலை அக்கம்பக்கத்தினர் ராமமூர்த்தியின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு தகவல் கொடுத்தனர். அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த எட்டரை சவரன் நகை திருடு போனது தெரியவந்தது. புகாரின்படி, ஆவடி முத்தாபுதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.