வீட்டில் வைத்திருந்த ரூ.90 லட்சம் மாயம் என பாஜ நிர்வாகி புகார்

சேலம்: சேலத்தை அடுத்துள்ள மல்லூர் தாசநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கருணாகரன் (50), சேலம் கிழக்கு மாவட்ட பாஜ செயலாளராக உள்ளார். இவர், அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசிக்கிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு கருணாகரன், சேலம் எஸ்பி அருண்கபிலனிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், ‘தனக்கு சொந்தமான பூர்வீக சொத்தை விற்று ரூ.90 லட்சம் பணத்தை வீட்டில் வைத்திருந்தேன். அந்த பணத்தை கடந்த 29ம் தேதி பார்த்தபோது காணவில்லை. அதனை திருடிச்சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத்தர வேண்டும்’ எனக்கூறியிருந்தார். புகாரின்பேரில், பாஜ மாவட்ட செயலாளர் கருணாகரனிடம் டிஎஸ்பி அமலாஅட்வின் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், சொத்தை விற்று ரூ.90 லட்சம் பெற்றதற்கான ஆவணங்களை அவர் இதுவரை போலீசில் கொடுக்கவில்லை. இதனால் இது கொள்ளை நாடகமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேக்கின்றனர்.

Related posts

அத்வானி மதுரை வருகையின் போது வெடிகுண்டு வைக்க திட்டமிட்டதாக கைதான ஷாகிர் சிறையில் தற்கொலை முயற்சி

கும்பகோணத்தில் ஓடும் பேருந்தில் நடத்துநர் மீது தாக்குதல் நடத்திய 3 இளைஞர்கள் கைது: சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் நடவடிக்கை

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி