வீட்டுக் கடன் நிறுவனமான எச்.டி.எஃப்.சி-யுடன் இணைக்கப்பட்டத்தை அடுத்து உலகின் 4-வது பெரிய வங்கியானது எச்.டி.எஃப்.சி..!!

மும்பை: வீட்டுக் கடன் நிறுவனமான எச்.டி.எஃப்.சி-யுடன் இணைக்கப்பட்டத்தை அடுத்து உலகின் 4-வது பெரிய வங்கியானது. இது நிறைவேறும் போது, இணைக்கப்பட்ட நிறுவனம், உலகளாவிய வங்கித் துறையின் முதல் தரவரிசையில் ஒரு இடத்தைப் பெறும் முதல் உள்நாட்டு நிறுவனமாக மாறும். எச்.டி.எஃப்.சி-யுடன் இணைக்கப்பட்டத்தை அடுத்து எச்.டி.எஃப்.சி. வங்கியின் சந்தை மதிப்பு ரூ.14,09,542 கோடியாக உயர்ந்துள்ளது.

கே.பி.மார்கன் சேஸ், ஐசிபிசி, பாங்க் ஆஃப் அமெரிக்கா ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக உலகின் 4-வது பெரிய வங்கியானது. சீன வேளாண் வங்கி, எச்.எஸ்.பி.சி., பாங்க் ஆஃப் சீனா, மார்கன் ஸ்டேன்லி ஆகிய வங்கிகளைப் பின்னுக்குத் தள்ளியது. எச்.டி.எஃப்.சி. – எச்.டி.எஃப்.சி. வங்கி இணைப்பு முறைப்படி நாளை அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 12 கோடி வாடிக்கையாளர்கள், 8,300 வங்கிக் கிளைகள் மற்றும் 1,77,000 ஊழியர்களுடன் பிரமாண்டமான வங்கியாகி உள்ளது.

இந்தியாவின் கார்ப்பரேட் வரலாற்றில் மிகப்பெரிய பரிவர்த்தனையாகக் கூறப்படும் எச்.டி.எஃப்.சி. இரட்டை இணைப்பு, நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்கும் எச்.டி.எஃப்.சி. வங்கி, மிகப்பெரிய உள்நாட்டு அடமானக் கடன் வழங்குநரான எச்.டி.எஃப்.சி. லிமிடெட்டைக் கைப்பற்றும். சுமார் 40 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தம், இந்தியாவில் ஒரு நிதித் துறையை உருவாக்கும். முன் இல்லாத வகையில் இந்த இணைப்பு 172 பில்லியன் டாலர் மதிப்பிலான வங்கியை உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அதிமுக கவுன்சிலர் பிரபாகரனுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து

தெலுங்கானாவில் மேடை சரிந்து கீழே விழுந்த நடிகை.. லேசான காயத்துடன் உயிர் தப்பினேன்: பிரியங்கா மோகன் பதிவு!!

பதிவுத்துறையில் செப்டம்பர் மாதம் வரை ரூ.1, 121 கோடி கூடுதல் வருவாய்: அமைச்சர் மூர்த்தி தகவல்