Wednesday, September 18, 2024
Home » தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்து இயக்கம்: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்து இயக்கம்: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

by Suresh

சென்னை: தொடர் விடுமுறை, முகூர்த்தம், கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்து இயக்கப்படுவதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் வெளியான அறிக்கையில்; 23/08/2024 (வெள்ளிக் கிழமை முகூர்த்தம்) 24/08/2024 (சனிக்கிழமை), 25/08/2024 (ஞாயிற்றுக் கிழமை) மற்றும் 26/08/2024 அன்று கிருஷ்ணஜெயந்தி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு 23/08/2024 மற்றும் 24/08/2024 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 23/08/2024 (வெள்ளிக் கிழமை) மற்றும் 24/08/2024 (சனிக் கிழமை) ஆகிய நாட்களில் 485 பேருந்துகளும், மற்றும் 25/08/2024(ஞாயிற்றுக் கிழமை) மற்றும் 26/08/2024 (திங்கள் கிழமை) கிருஷ்ண ஜெயந்தி அன்று கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 60 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 23/08/2024 (வெள்ளிக் கிழமை மற்றும் 24/08/2024 (சனிக்கிழமை) அன்று 70 பேருந்துகளும் மாதாவரத்திலிருந்து 23/08/2024 வெள்ளிக் கிழமை மற்றும் 24/08/2024 (சனிக்கிழமை) அன்று 20 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 350 சிறப்பு பேருந்துகளும் இயக்க
திட்டமிடப்பட்டுள்ளது.

 

You may also like

Leave a Comment

twenty − 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi