தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பம் குடும்பமாக ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் ஏரியில் படகு சவாரி செய்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். மேலும் அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, கிளியூர் நீர்வீழ்ச்சி மற்றும் மான் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்தனர். லேடீஸ் மற்றும் ஜென்ட்ஸ் சீட் பகுதிகளிலும் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. இதேபோல், இடைப்பாடி அருகேயுள்ள பூலாம்பட்டியில் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. அவர்கள் கடைகளில் மீன்களை வாங்கி சுவைத்து சாப்பிட்டனர். பின்னர், விசை படகில் சவாரி செய்து மகிழ்ந்தனர். இதேபோல் சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, மேட்டூர் அணை பூங்கா, ஒகேனக்கல்லிலும் இன்று சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகமாக இருந்தது.