சென்னை: நாளை விடுமுறை என்பதால் ஞாயிறு அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயங்கும் என சென்னை கோட்டம் அறிவித்துள்ளது. சென்னை, அரக்கோணம், செங்கல்பட்டு, சூலூர்பேட்டை ஆகிய வழித்தடங்களில் ஞாயிறு அட்டவணைப்படி ரயில் இயக்கப்பட உள்ளது. காந்திஜெயந்தியை முன்னிட்டு நாளை பொதுவிடுமுறை என்பதால் ஞாயிறு அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.