மகேந்திராசிட்டி, பரனூர், திம்மராஜபேட்டை, புவிப்பாக்கம் என 4 கிலோ மீட்டர்தூரத்திற்கு நேற்று வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தொடர்ந்து போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். வழக்கமாக பரனூர் சுங்கச்சாவடியில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் 6 பூத்களும், அதே போல் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் 6 பூத்கள் என மொத்தம் 12 பூத்களில் அனைத்து வாகனங்களும் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
நேற்று ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை குறைக்க பரனூர் சுங்கசாவடியில் கூடுதலாக 2 கவுன்டர்களை திறந்து 8 பூத்களில் வாகனங்களை அனுப்பினர். போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.விடுமுறை முடிந்து மக்கள் மீண்டும் சென்னை நோக்கி படையெடுக்கும் போது இதேபோல், போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே அதிகாரி கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க
கோரிக்கை விடப்பட்டுள்ளது.