தொடர் விடுமுறை, மிலாது நபி என 4 நாட்கள் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: தொடர் விடுமுறை, மிலாது நபி என 4 நாட்கள் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து நாளை மற்றும் செப். 14 ஆகிய நாட்களில் 955 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கும்பகோணம், தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய ஊர்களில் இருந்து சென்னைக்கு 540 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் பெங்களூரு, கோவை, திருப்பூர், மதுரை ஆகிய இடங்களுக்கு 250 பேருந்துகள் கூடுதலாக இயக்கம் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து 190 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

Related posts

திருவாலங்காடு அருகே தொடர் திருட்டில் ஈடுபட்டவருக்கு தர்ம அடி: போலீசில் ஒப்படைத்தனர்

திருத்தணி பேருந்து நிலையத்தில் யணிகளிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது

கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார்