பல பெண்களுடன் உல்லாசம்; 4 மாதங்களுக்கு ஒருமுறை எச்ஐவி பரிசோதனை செய்த பிரஜ்வல்: எஸ்ஐடி விசாரணையில் பரபரப்பு தகவல்

பெங்களூரு: பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா, நான்கு மாதங்களுக்கு ஒருமுறை எச்ஐவி பரிசோதனை செய்து வந்தது எஸ்ஐடி நடத்திய விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

மாநிலத்தின் ஹாசன் தொகுதி முன்னாள் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் புகார் வெளியாகியது. நூற்றுக்கணக்கான பெண்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக பென்டிரைவ் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையில் பிரஜ்வல் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்ட 5 பெண்கள் கொடுத்த புகார் அடிப்படையில் சிஐடி போலீசாரால் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணை படையினர் விசாரணை நடத்திய பின் நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளார்.

இந்நிலையில் இப்புகார் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிறப்பு விசாரணை படை அதிகாரிகள், பிரஜ்வல் ரேவண்ணாவின் கடந்த கால வாழ்க்கை முறை மற்றும் செயல்பாடுகள் குறித்து நடத்தி வரும் விசாரணையில், பிரஜ்வல் ரேவண்ணா, நான்கு மாதங்களுக்கு ஒருமுறை எச்ஐபி பரிசோதனை செய்து கொண்டது தெரியவந்துள்ளதுடன், எந்தெந்த மையங்களில் பரிசோதனை நடத்தினார் என்ற விவரம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரே சிறையில் சகோதரர்கள்
பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் ஓரின சேர்க்கை புகாரில் கைதான அவரது சகோதரர் சூரஜ் ரேவண்ணா இருவரும் ஒரே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்