பாஜவின் இந்த தோல்விக்கான காரணங்களை அவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
அது வருமாறு:
* உ.பியின் கள நிலவரத்தை அடிப்படை யதார்த்தத்தை பாஜ தலைமை புரிந்து கொள்ளவில்லை.
* யோகி ஆதித்யநாத் ஆட்சியில் திமிர்பிடித்த அதிகாரவர்க்கம், தன்னிச்சையாக செயல்படும் காவல்துறையும் இணைந்து பொதுமக்களின் ஒவ்வொரு பிரச்சனையையும் மூடி மறைக்க முயன்றன.
* யோகி ஆதித்யநாத்தின் இமேஜைக் காப்பாற்ற, அப்பாவிகளை அதிகாரவர்க்கம் துன்புறுத்தியது.
* லாக்அப் மரணங்கள், நீதிமன்றங்களுக்குள் நடக்கும் கொலைகள், சிறைச்சாலைகளுக்குள் நடக்கும் கொலைகள் போன்ற பல சம்பவங்களால் மக்கள் அரசின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர்.
* சமூக ஊடகங்களில் குரல் எழுப்பியதற்காக சாமானிய மக்கள் எதிரிகளைப் போல நடத்தப்பட்டனர், வாடகைக்கு அமர்த்தப்பட்ட ஆயுதப் படையால் தாக்கப்பட்டனர்.
* இது போதாதென்று மோடி மீண்டும் பிரதமரானால், ஆத்தியநாத்தின் முதல்வர் பதவி பறிக்கப்படும் என்ற எதிர்க்கட்சிகளின் பிரசாரம், முதல்வரின் ஆதரவாளர்களையே பாஜவுக்கு எதிராக திரும்பியது.
* ஓபிசி, தலித், சிறுபான்மையினரின் வெற்றி: அகிலேஷ் யாதவ் கருத்து
சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று டிவிட்டரில் பதிவிடுகையில், பிற்படுத்தப்பட்ட, தலித், சிறுபான்மை, பழங்குடியினர் தான் இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு காரணம். இம்முறை மக்கள் வெற்றி பெற்றுள்ளனர், ஆட்சியாளர்கள் அல்ல. பொதுமக்கள் வெற்றி பெறட்டும். நீங்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை நாங்கள் முழு பொறுப்புடன் காப்பாற்றுவோம், அதை நிறைவேற்றுவோம் என குறிப்பிட்டுள்ளார்.