தேனி, அல்லிநகரம் அண்ணாநகர் 2வது தெருவில் குடியிருப்பவர் பாண்டியன் (45). டீக்கடை நடத்தி வருகிறார். இவர் இந்து எழுச்சி முன்னணி மாவட்ட துணை அமைப்பாளராக உள்ளார். கடந்த 10ம் தேதி இவர் தேனி அருகே போடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒரு கிராமத்திற்கு சென்றுள்ளார். அங்கே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவனிடம் பாண்டியன் ஆசை வார்த்தை கூறி, அருகே இருந்த தோட்டத்திற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் திரண்டு சென்று, பாண்டியனை சம்பவ இடத்தில் வைத்து தர்ம அடி கொடுத்து பழனிசெட்டிபட்டி போலீசில் அவரை ஒப்படைத்தனர். இதுகுறித்து சிறுவனின் தந்தை அளித்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்து அமைப்பு நிர்வாகி கைது
previous post