இந்தி திணிப்பு மட்டுமல்ல, எந்த திணிப்பும் தமிழ்நாட்டை நெருங்க முடியாது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: அண்ணா-கலைஞர்-மு.க.ஸ்டாலினின் தொண்டர்கள் உலவுகிற வரைக்கும், இந்தி திணிப்பு மட்டுமல்ல, எந்த திணிப்பும் தமிழ்நாட்டை நெருங்க முடியாது என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தளம் பதிவில் கூறியிருப்பதாவது:

இந்தி ஆதிக்கமெனும் நெருப்பு தமிழ்நாட்டை உரசாமல் இருக்க, தங்களையே தீக்கிரையாக்கிக் கொண்ட மொழிப்போர் தியாகிகளின் நினைவாக, தமிழ்நாடெங்கும் இன்றைய தினம் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன. கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்தி திணிப்பும்-அதற்கெதிரான நம் சீற்றமும், இன்றும் விமான நிலையங்களிலும்-ரயில் நிலையங்களிலும்-அஞ்சல் நிலையங்களிலும் தொடருகின்றன.

இன்றைக்கு இந்திக்கு துணையாக சமஸ்கிருதத்தையும் அழைத்து வர முயற்சிக்கின்றனர். கடைசி உடன்பிறப்பு இருக்கிற வரைக்கும்-கருப்பு, சிவப்புக் கொடி இந்த மண்ணில் பறக்கிற வரைக்கும்-அண்ணா-கலைஞர்-மு.க.ஸ்டாலினின் தொண்டர்கள் உலவுகிற வரைக்கும், இந்தி திணிப்பு மட்டுமல்ல, எந்த திணிப்பும் தமிழ்நாட்டை நெருங்க முடியாது. மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

தில்லைநகர் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து சவரன் ரூ.54,560-க்கு விற்பனை

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மறைவிற்கு நடிகர் ரா.சரத்குமார் இரங்கல்..!!