கடந்த 5 நாட்களில் மழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இமாச்சல பிரதேசத்தில் மட்டும் 80 பேர் உயிரிழந்துவிட்டனர். உத்தரப் பிரதேசத்தில் ஆக்ரா மற்றும் பிரயாக்ராஜ் ஆகிய பகுதிகளில் யமுனை மற்றும் கங்கை ஆறுகளில் வெள்ளம் இரு கரைகளையும் தொட்டு பாய்வதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஜம்மு – காஷ்மீரில் சிக்கி ஜம்மு -ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை 5 நாட்களுக்கு பிறகு போக்குவரத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் பெருமழை தொடர்பான விபத்துக்கள்,நிலச்சரிவுகள், வெள்ளம் காரணமாக நேற்று ஒரே நாளில் 21 உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன. இதையடுத்து ஜூலை 8ம் தேதி முதல் மழை, வெள்ளத்திற்கு பலியானோரின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.