ஜெய் ராம் தாகூரின் குற்றச்சாட்டை சிம்லா ஜல் பிரபந்தன் நிகாம் லிமிடெட் நிறுவனம் மறுத்துள்ளது. இந்த நிறுவனம் குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளின் வரைப்படத்தை உருவாக்குவதற்காக கணக்கெடுப்பு பணிக்காக டிரோன்கள் அனுப்பப்பட்டதாக தெரிவித்துள்ளது. இதற்காக மாநில அரசிடம் இருந்தும், எஸ்பியிடம் இருந்தும் உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.