இதில் ஒரு எம்எல்ஏவுக்கு ரூ.100 கோடி வரை பாஜவினர் லஞ்சம் கொடுக்க முன்வந்தனர். பண பலத்தை வைத்து கொண்டு மாநில அரசை கவிழ்க்க பிரதமர் மோடி முயற்சித்தார். கடந்த 2 ஆண்டுகளில் இமாச்சலில் இரண்டு பெரிய சம்பவங்கள் நிகழ்ந்தன.ஒன்று இயற்கை பேரழிவு. இன்னொன்று மாநில அரசை கவிழ்ப்பதற்கு நடந்த சதி செயல்.
இயற்கை பேரழிவு ஏற்பட்ட போது, காங்கிரசின் தொண்டர் முதல் அமைச்சர்கள் வரை மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். ஆனால் பாஜவினர் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் வேடிக்கை பார்த்தனர். பேரழிவு நிதியை கூட ஒன்றிய அரசு வழங்கவில்லை. இமாச்சல் பிரதேசம் என்னுடைய 2வது வீடு என்று சொல்லும் மோடி இயற்கை பேரழிவு ஏற்பட்ட போது மாநிலத்தை வந்து பார்க்க கூட வரவில்லை. இது தான் பாஜ வின் உண்மையான முகம் ஆகும்’’ என்றார்.